ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஏற்றத்தில் பங்குச் சந்தை: 60,000 புள்ளிகளை நெருங்கும் சென்செக்ஸ்

இந்த வார வர்த்தகத்தில் தொடர்ந்து இன்றும் பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.

News image
Updated On :2 பிப்ரவரி 2022, 10:43 am

DIN

இந்த வார வர்த்தகத்தில் தொடர்ந்து இன்றும் பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.

நேற்று(பிப்.1) 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 

பட்ஜெட் அறிக்கைகளும் பங்குச் சந்தையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் நேற்றைய வர்த்தகத்தைத் தொடர்ந்து இன்றும்  பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.

நேற்று (பிப்.1) 58,862.57 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 59,293.44 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ்  695.76 புள்ளிகள் 59,558.33 உயர்ந்து  புள்ளிகளுடன் நிலைபெற்றது.

அதேபோல், 17,576.85 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,706.20 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 203.15 புள்ளிகள் அதிகரித்து 17,780.00  புள்ளிகளில் நிறைவடைந்தது.

இதனால், கடந்த 2 வாரமாக வீழ்ச்சியை சந்தித்து வந்த பங்குச் சந்தை கடந்த சில நாள்களாக எழுச்சியடைந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.