எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அருணாசல்: பனிப்புயலில் சிக்கிய 7 ராணுவ வீரர்களை மீட்க நடவடிக்கை

அருணாச்சலப் பிரதேசம் காமெங் செக்டார் பகுதியில் இன்று நேரிட்ட பயங்கர பனிப்புயலில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 7 ராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டனர்.

News image
அருணாசல்: பனிப்புயலில் சிக்கிய 7 ராணுவ வீரர்களை மீட்க நடவடிக்கை (கோப்பிலிருந்து)
Updated On :7 பிப்ரவரி 2022, 10:22 am

PTI


புது தில்லி: அருணாச்சலப் பிரதேசம் காமெங் செக்டார் பகுதியில் இன்று நேரிட்ட பயங்கர பனிப்புயலில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 7 ராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டனர்.

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது. மீட்புப் பணியில் ஈடுபட சிறப்பு நிபுணத்துவம் பெற்ற தனிப்படையினர் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.

சம்பவம் நடந்த பகுதியில், கடந்த ஒரு சில நாள்களாக மோசமான வானிலை நிலவி வருவதாகவும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் நேற்றிலிருந்து அந்த இடத்தில் சிக்கிக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.