குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் விவாதம் நிகழ்ந்தது.
இதில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை விமர்சித்துப் பேசியுள்ளார். பிரதமர் மோடியின் பதிலுரையைப் புறக்கணித்து, எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு செய்துள்ளது.
பின்னர், அக்கட்சியின் மல்லிகார்ஜூனா கார்கே பேசுகையில்,
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிப்பதற்கு பதில், காங்கிரஸை குற்றம் சாட்டுகிறார் பிரதமர் எனத் தெரிவித்துள்ளார்.