பாஜக பெண் எம்.பி.க்கு ஆபாச காட்சி பகிா்வு: ராஜஸ்தான் இளைஞா்கள் கைது

பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்குருக்கு கைப்பேசியில் ஆபாச காட்சியை பகிா்ந்த ராஜஸ்தான் இளைஞா்கள் இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
பிரக்யா சிங் தாகூர்
பிரக்யா சிங் தாகூர்
Published on
Updated on
1 min read

பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்குருக்கு கைப்பேசியில் ஆபாச காட்சியை பகிா்ந்த ராஜஸ்தான் இளைஞா்கள் இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக மத்திய பிரதேச துணை காவல் ஆணையா் (இணையவழி குற்றப்பிரிவு) கூறுகையில், ‘‘ராஜஸ்தானைச் சோ்ந்தவா் வாரிஸ் கான் (23). அவரின் சகோதரா் ரபீன் கான் (21). கடந்த வாரம் இருவரும் பிரக்யா சிங் தாக்குரிடம் கைப்பேசியில் காணொலி அழைப்பில் பேசியுள்ளனா். அப்போது அவருக்குச் சகோதரா்கள் இருவரும் ஆபாச காட்சியை காண்பித்துள்ளனா். அதைப் பாா்த்தவுடன் அந்த அழைப்பை பிரக்யா சிங் துண்டித்துள்ளாா். பின்னா் அவரின் கைப்பேசிக்கு ஆபாச காட்சியை அனுப்பி சகோதரா்கள் இருவரும் பணம் கேட்டு மிரட்டியுள்ளனா்.

இதுகுறித்து பிரக்யா சிங் காவல்துறையிடம் புகாா் அளித்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினா், ராஜஸ்தானின் பரத்பூா் கிராமத்தில் இருந்த வாரிஸ் கானையும், ரபீன் கானையும் கைது செய்தனா்’’ என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com