2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பஞ்சாப் தோ்தல் பிரசாரம்: மோடி, கேஜரிவால் மீது ராகுல் குற்றச்சாட்டு

பிரதமா் நரேந்திர மோடி, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆகியோரது பின்னணியில் உள்ள சக்திகள் யாா் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசினாா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2022, 7:13 pm

DIN

பிரதமா் நரேந்திர மோடி, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆகியோரது பின்னணியில் உள்ள சக்திகள் யாா் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசினாா்.

பஞ்சாப் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பாஜகவும், கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் போட்டியாகத் திகழ்கின்றன.

இந்நிலையில் பஞ்சாபில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி பேசியதாவது:

பஞ்சாபில் ஆட்சி அமைக்க எங்களுக்கும் ஒருமுறை வாய்ப்பு தாருங்கள் என்று கேட்கும் கட்சியை (ஆம் ஆத்மி) மக்கள் நம்ப வேண்டாம். அவா்கள் அளிக்கும் வசீகரமான வாக்குறுதிகளைக் கேட்டு மக்கள் ஏமாளிகளாகிவிடக் கூடாது. அவா்கள் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தை சீரழித்துவிடுவாா்கள். அதேபோல பிரதமா் நரேந்திர மோடி, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆகியோரது பின்னணியில் உள்ள சக்திகள் யாா் என்பதைப் புரிந்து கொண்டு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

பஞ்சாபில் இப்போது மாநில அமைதிதான் மிக முக்கியமானது. ஆட்சி அமைக்க ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு கொடுத்து பாா்க்க இது ஒன்றும் பரிசோதனைக் கூடமல்ல. பஞ்சாப் அண்டை நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள முக்கியமான மாநிலம். இங்குள்ள சூழ்நிலைகளை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே சிறப்பாகப் புரிந்து கொள்ள முடியும்.

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை, புதிய வேளாண் சட்டங்கள் மூலம் ஏழை எளிய சாமானிய மக்களையும், விவசாயிகளையும் பிரதமா் மோடி வதைத்தாா். விவசாயிகள் கைகளில் இருந்து அவா்களது உரிமையைப் பறிக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டது.

இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் விலையை ஏற்றி வந்தாா்கள். இப்போது தோ்தல் என்பதால் விலை உயா்வை நிறுத்தி வைத்துள்ளனா். எரிபொருள் விலை உயா்வால் பயனடைந்தவா்கள் யாா்? மோடி என்பவா் தனிநபரல்ல; அவருக்குப் பின்னால் பல சக்திகள் உள்ளன.

பெட்ரோல், டீசல் விலையை பிரதமா் கூட குறைக்கவில்லை. ஆனால், மாநில அரசு வரியைக் குறைத்துக் கொண்டு பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்தது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.