தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

கரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா கோவிஷீல்டு - கோவாக்ஸின் கலப்பு? விரைவில் முடிவு

கோவிஷீல்டு - கோவாக்ஸின் மருந்துகளை கலந்து செலுத்தும் முறை அதிகப் பலனை அளிக்குமா என்பது குறித்து நடந்து வரும் ஆய்வு முடிவு பிப்ரவரி இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா கோவிஷீல்டு - கோவாக்ஸின் கலப்பு?

Published On :1 பிப்ரவரி 2024, 1:55 pm IST


புது தில்லி: மக்களுக்கு செலுத்தும் தடுப்பூசியில், இரண்டு தவணைகளின் போது, கோவிஷீல்டு - கோவாக்ஸின் மருந்துகளை கலந்து செலுத்தும் முறை அதிகப் பலனை அளிக்குமா என்பது குறித்து நடந்து வரும் ஆய்வு முடிவு பிப்ரவரி இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பன்முக தடுப்பூசியின் செயல்திறன், புதிய வகை கரோனா வைரஸ்களுக்கு எதிராக எந்த வகையில் செயலாற்றும் என்பது குறித்து வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் ஆய்வு நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் புகழ்பெற்ற தொற்றுநோயியல் துறை நிபுணரும், சிஎம்சி மருத்துவக் கல்லூரியின் பேராசிரியருமான, டாக்டர் ககன்தீப் காங்,  இந்த ஆய்வு குறித்துப் பேசுகையில், இரண்டு வகையான கரோனா தடுப்பூசிகளையும், கலந்து பொதுமக்களுக்கு செலுத்தும் போது, அது வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்குவது மற்றும் அதன் செயல்திறன், ஒரே வகையான தடுப்பூசியை இரண்டு தவணைகளில் செலுத்தும் போது செயல்படுவதை விட எந்த அளவுக்கு வேறுபடுகிறது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்கிறார்.

இந்த ஆய்வில், நோய் எதிர்ப்பாற்றல் வெளிப்படும் திறனின் முதல் ஆய்வு முடிவு, பிப்ரவரி மாத இறுதியில்தான் தெரியவரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆய்வின்படி, முதலில் கோவாக்ஸின் தடுப்பூசியும், பிறகு கோவிஷீல்டு தடுப்பூசியும் அல்லது முதலில் கோவிஷீல்டு தடுப்பூசியும், இரண்டாம் தவணையக கோவாக்ஸின் தடுப்பூசியும் செலுத்துவதால் ஏற்படும் நோய் எதிர்ப்பாற்றல் குறித்து தெரியவரும் என்றார்.

ஆரம்பகட்டத்தில், இந்த ஆய்வுக்கு தன்னார்வலர்களைத் திரட்டுவது கடினமான பணியாக இருந்தது. வேறு சில நிறுவனங்களையும் அணுகினோம். தற்போது இந்த ஆய்வு சுமார் 400 பேரிடம் நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.