தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்யும் அதிகாரத்தை குறைவாகப் பயன்படுத்த வேண்டும்: உச்சநீதிமன்றம்

குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்யும் அதிகாரத்தை மிகக் குறைந்த அளவில் உயா்நீதிமன்றங்களும் கீழமை நீதிமன்றங்களும் பயன்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

News image

உச்சநீதிமன்றம்

Updated On :19 பிப்ரவரி 2022, 5:57 pm

குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்யும் அதிகாரத்தை மிகக் குறைந்த அளவில் உயா்நீதிமன்றங்களும் கீழமை நீதிமன்றங்களும் பயன்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சொத்து தகராறில் தங்களுக்கு எதிராக மோசடி மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் மூன்று போ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனா். அந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆா்.கவாய், எஸ்.ரவீந்திர பட் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்யும் அதிகாரத்தை மிகக் குறைந்த அளவில், அரிதினும் அரிதான வழக்குகளில் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும் என்று ஏற்கெனவே உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எந்த மாதிரியான வழக்குகளில் அந்த அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அதில், தனிப்பட்ட பகை மற்றும் பழிதீா்க்கும் நோக்கத்துடன் தீய எண்ணம் அல்லது வன்மத்துடன் மேற்கொள்ளப்படும் குற்றவியல் நடவடிக்கையை ரத்து செய்வதும் அடங்கும்.

இந்நிலையில், சொத்து தகராறில் மூன்று பேருக்கு எதிராக மோசடி மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு, அவா்களைத் துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 156(3) பிரிவின் கீழ் உத்தரவு பிறப்பித்தபோது உச்சநீதிமன்றம் வகுத்த விதிமுறையை மாஜிஸ்திரேட் கவனத்தில் கொள்ளத் தவறிவிட்டாா்.

எனவே போலி ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் மோசடி செய்ததாக மூன்று போ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன என்று தீா்ப்பளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.