பேரவைத் தேர்தல்: உ.பி.யில் 36%, பஞ்சாபில் 34% வாக்குப்பதிவு

உத்தரப் பிரதேசத்தில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 35.8 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
பேரவைத் தேர்தல்: உ.பி.யில் 36%, பஞ்சாபில் 34% வாக்குப்பதிவு
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 35.8 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இதேபோன்று பஞ்சாபில் ஒரேகட்டமாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் இதுவரை 34.1 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் ஏற்கெனவே இரண்டு கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று காலை 7 மணி முதல் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

16 மாவட்டங்களில் ஹாத்ரஸ், ஃபிரோஸாபாத், ஃபரூக்காபாத், கான்பூர், ஹமீர்பூர், மைன்புரி, ஜான்சி, லலித்பூா், காஸ்கஞ்ச் உள்ளிட்ட 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் 627 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். 2.15 கோடிக்கும் அதிகமானவா்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனா்.

பஞ்சாப் நிலவரம்: 34.1% (பிற்பகல் 1 மணி வரை)

பஞ்சாப் சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை (பிப். 20) காலை 8 மணி முதல் ஒரே கட்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 

மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தோ்தலில் பதிவாகும் வாக்குகள் மாா்ச் 10-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

பஞ்சாபில் தேர்தலையொட்டி எல்லைகளில் பலத்த சோதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கான விவரங்கள் முழுப்பட்டியலாக ஒட்டப்பட்டுள்ளது. இதனால் வாக்காளர்கள் எளிதில் வாக்குச்சாவடி மையங்களை அறிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com