தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தெலங்கானாவில் விமான விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த பெண் பயிற்சி விமானி பலி

தெலங்கானாவில், தனியார் விமானப் பயிற்சி நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானதில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் பயிற்சி விமானி பலியானார்.

News image

தெலங்கானாவில் விமான விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த பெண் பயிற்சி விமானி பலி

Updated On :26 பிப்ரவரி 2022, 10:44 am

PTI


ஹைதராபாத்: தெலங்கானாவில், தனியார் விமானப் பயிற்சி நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானதில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் பயிற்சி விமானி பலியானார்.

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில், தனியார் விமானப் பயிற்சி நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம், விவசாய நிலத்தில் சனிக்கிழமை காலை விழுந்து விபத்துக்குள்ளானது.

விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் அளித்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

Story image

முதற்கட்ட விசாரணையில், விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த பயிற்சி விமானி தமிழகத்தைச் சேர்ந்த பெண் என்பது தெரிய வந்துள்ளது.

நாகார்ஜுனா சாகர் பகுதியிலிருந்து பறந்து வந்த விமானம், முற்பகல் 11.30 மணியளவில், திடீரென நிலப்பரப்பில் விழுந்து, தீப்பற்றி எரிந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.