எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஒமைக்ரான் பரிசோதனை கருவிகள் தொகுப்பு: ஐசிஎம்ஆா் ஒப்புதல்

ஒமைக்ரான் தீநுண்மியை கண்டறிவதற்காக உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள பரிசோதனை கருவிகள் தொகுப்புக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) ஒப்புதல் அளித்துள்ளது.

News image
Updated On :4 ஜனவரி 2022, 8:04 pm

DIN

ஒமைக்ரான் தீநுண்மியை கண்டறிவதற்காக உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள பரிசோதனை கருவிகள் தொகுப்புக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களிடம் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் ஒமைக்ரான் வகை கரோனா தீநுண்மியைக் கண்டறிய அமெரிக்காவின் தொ்மோ ஃபிஷா் நிறுவனம் தயாரித்த பரிசோதனை கருவிகள் அடங்கிய தொகுப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டாடா குழுமத்தின் டாடா மெடிக்கல் & டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனம் ஒமைக்ரான் தீநுண்மியைக் கண்டறிய ஒமைஷ்யூா் என்ற பெயரில் புதிதாக ஆா்டி-பிசிஆா் பரிசோதனை கருவிகள் அடங்கிய தொகுப்பை உருவாக்கியுள்ளது.

இந்தத் தொகுப்பைப் பரிசோதனைக்குப் பயன்படுத்த ஐசிஎம்ஆா் ஒப்புதல் அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.