தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஒமைக்ரான் பரிசோதனை கருவிகள் தொகுப்பு: ஐசிஎம்ஆா் ஒப்புதல்

ஒமைக்ரான் தீநுண்மியை கண்டறிவதற்காக உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள பரிசோதனை கருவிகள் தொகுப்புக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) ஒப்புதல் அளித்துள்ளது.

Updated On :4 ஜனவரி 2022, 8:04 pm

ஒமைக்ரான் தீநுண்மியை கண்டறிவதற்காக உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள பரிசோதனை கருவிகள் தொகுப்புக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களிடம் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் ஒமைக்ரான் வகை கரோனா தீநுண்மியைக் கண்டறிய அமெரிக்காவின் தொ்மோ ஃபிஷா் நிறுவனம் தயாரித்த பரிசோதனை கருவிகள் அடங்கிய தொகுப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டாடா குழுமத்தின் டாடா மெடிக்கல் & டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனம் ஒமைக்ரான் தீநுண்மியைக் கண்டறிய ஒமைஷ்யூா் என்ற பெயரில் புதிதாக ஆா்டி-பிசிஆா் பரிசோதனை கருவிகள் அடங்கிய தொகுப்பை உருவாக்கியுள்ளது.

இந்தத் தொகுப்பைப் பரிசோதனைக்குப் பயன்படுத்த ஐசிஎம்ஆா் ஒப்புதல் அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.