பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

சொகுசுக் கப்பலிலிருந்து கரோனா நோயாளிகள் மும்பை சிறப்பு மையத்துக்கு மாற்றம்

கோவாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட சொகுசுக் கப்பலில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 66-க்கும் மேற்பட்ட பயணிகளில், இதுவரை 41 பேர் மும்பையில் சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக

சொகுசுக் கப்பலிலிருந்து 41 கரோனா நோயாளிகள்சிறப்பு மையத்துக்கு மாற்றம்

Published On :1 பிப்ரவரி 2024, 1:32 pm IST

மும்பை: கோவாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட சொகுசுக் கப்பலில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 66-க்கும் மேற்பட்ட பயணிகளில், இதுவரை 41 பேர் மும்பையில் சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட 19 பயணிகள், இன்னமும் சொகுசுக் கப்பலிலேயே இருக்கிறார்கள். இதுவரை கப்பலிலிருந்த 1,827 பேருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களது முடிவுகள் இன்று மாலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் மும்பை மாநகராட்சிச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Story image

இந்த சொகுசுக் கப்பலிலிருந்து 41 கரோனா பாதித்தவர்களைத் தவிர வேறு எந்தப் பயணியும், வெளியே இறங்க மும்பை மாநகராட்சி அனுமதிக்கவில்லை.

Story image

பரிசோதனை முடிவுகள் வெளிவந்த பிறகே, கரோன இல்லாதவர்கள் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள். அவர்களும் அடுத்த 7 நாள்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தபப்டுவார்கள் என்றும் அவர் கூறினார்.

Story image

புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக மும்பையில் இருந்து கோவாவுக்குச் சென்ற காா்டீலியா எம்பிரஸ் சொகுசுக் கப்பலின் ஊழியா் ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கப்பலில் கரோனா பாதிக்கப்பட்ட 27 பயணிகள் கோவாவில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க மறுப்புத் தெரிவித்துவிட்டனா். இதனால் சொகுசு கப்பல் மீண்டும் மும்பைக்கே திருப்பி அனுப்பப்பட்டது. தெற்கு மும்பையில் உள்ள பல்லாா்ட் கப்பல் முனையத்தில் இந்த சொகுசுக் கப்பல் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு வந்து சோ்ந்தது. 

Story image

அப்போது கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 66-ஐ தாண்டியது. கரோனா பாதித்தவா்களை தனிமைப்படுத்தல் முகாமுக்கு அதிகாரிகள் கொண்டு சென்றனா். மீதமுள்ளவா்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகள் புதன்கிழமை வரும் என்பதால் அதுவரை அவா்கள் அனைவரும் கப்பலிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனா் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.