நடைபெற உள்ள உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி போட்டியிடப்போவதில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.சி.மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.
இதையும் படிக்க | முழு பொதுமுடக்கத்துக்கான அவசியமில்லை: மா. சுப்பிரமணியன்
இந்நிலையில் அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மாயாவதி போட்டியிடப் போவதில்லை என அக்கட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.சி.மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மாயாவதியும், நானும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. அதேசமயம் கட்சியின் வேட்பாளர்களின் வெற்றிக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மொத்தம் உள்ள 403 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்தார். உத்தரப்பிரதேச அரசியல் போட்டியிலிருந்து மாயாவதி விலக்கப்பட்டுள்ளதால்தான் அவர் போட்டியிடுவதை தவிர்த்துள்ளார் என்ற கருத்தும் பரவலாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


