புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு
/

கோவா தேர்தல்: தேசியவாத காங்கிரஸ், சிவசேனை நாளை பேச்சு

கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனை கட்சிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடத்துகின்றன.

News image

கோப்புப்படம்

Updated On :17 ஜனவரி 2022, 2:51 pm

DIN


கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனை கட்சிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடத்துகின்றன.

கோவாவில் 40 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 14-ம் தேதி நடைபெறுகிறது. மகாராஷ்டிரத்தில் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் சிவசேனை மற்றும் தேசியவாத காங்கிரஸ் கோவாவிலும் கூட்டணி வைத்து போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றன.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் மகாராஷ்டிர அமைச்சருமான நவாப் மாலிக் செய்தியாளர்களிடம் கூறியது:

"சிவசேனையுடனான இறுதிப் பேச்சுவார்த்தை குறித்த அறிவிப்பை கட்சியின் மூத்த தலைவர் பிரஃபுல் படேல் அறிவிப்பார். தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுக்கு பிரஃபுல் படேலுடன் ஜிதேந்திர அவாதும் கோவா செல்கிறார்.

உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதியுடன் கூட்டணி வைத்துள்ளோம். மணிப்பூரில் காங்கிரஸுடன் கைகோர்த்துள்ளோம். கோவாவில் கூட்டணி வைக்க மாநில காங்கிரஸ் தலைமை ஒப்புக்கொள்ளாததால், சிவசேனையும் தேசியவாத காங்கிரஸும் கூட்டாகப் போட்டியிட முடிவெடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.