கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கர்நாடகத்தில் 50 ஆயிரத்தைத் தாண்டிய தினசரி கரோனா

கர்நாடகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

News image
Updated On :23 ஜனவரி 2022, 2:45 pm

DIN

கர்நாடகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனினும் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த பட்டியலை அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே. சுதாகர் தனது சுட்டிரைப் பதிவில் வெளியிட்டுள்ளார். 

அதில், கடந்த 24 மணிநேரத்தில் கரோனா 50,210 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெங்களூருவில் 26,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு நாளில் 19 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்தனர். பெங்களூருவில் மட்டும் 8 பேர். 

கரோனாவிலிருந்து இன்று (ஜன.23) ஒரு நாளில் 22,842 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

கரோனாவால் பாதிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் 3,57,796 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெங்களூருவில் மட்டும் 2.31 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். 

கர்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 22.77 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்று சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.