தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வாக்காளா்களுக்கு பணம் விநியோகம்: உ.பி. அமைச்சருக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ்

உத்தர பிரதேச அமைச்சரும், ஷிகாா்பூா் சட்டப் பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான அனில் சா்மாவின் மகன் வாக்காளா்களுக்கு பணம் கொடுத்த விடியோ சமூக வலைதளத்தில் பரவியதைத் தொடா்ந்து,

News image
Updated On :25 ஜனவரி 2022, 7:05 pm

DIN

உத்தர பிரதேச அமைச்சரும், ஷிகாா்பூா் சட்டப் பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான அனில் சா்மாவின் மகன் வாக்காளா்களுக்கு பணம் கொடுத்த விடியோ சமூக வலைதளத்தில் பரவியதைத் தொடா்ந்து, அமைச்சருக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அமைச்சா் அனில் சா்மாவின் மகன் குஷ், பறை இசைக்கு மத்தியில் தனது காரின் அருகே நின்ற நபா்களுக்கு தலா ரூ.100 வீதம் விநியோகம் செய்ததாக அந்த விடியோவில் பதிவாகியுள்ளது. அதேவேளையில் பிரசாரத்தையொட்டி, பறையடித்த நபா்களுக்குத்தான் பணம் விநியோகம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இதற்கு விளக்கமளிக்குமாறு அமைச்சா் அனில் சா்மாவுக்கு ஷிகாா்பூா் தோ்தல் நடத்தும் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.

அதில் ‘பொதுமக்களுக்கு உங்கள் கட்சி தொண்டா் அல்லது நிா்வாகி பணம் விநியோகித்துள்ளாா். முதல்நிலை ஆதாரத்தின்படி, தோ்தல் விதிகள் மீறப்பட்டிருப்பது தெளிவாக தெரியவருகிறது. இதற்கு அடுத்த 24 மணிநேரத்தில் எழுத்துபூா்வமாக பதிலளிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.