நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு ஜனவரி 31ஆம் தேதி அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என நாடாளுமன்ற விவாகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி புதன்கிழமை தெரிவித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கவுள்ளது. அன்றைய தினம் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவா் உரையாற்றவுள்ளாா். அதனைத்தொடா்ந்து கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி மாா்ச் 14 முதல் ஏப்ரல் 8 வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக அனைத்துக் கட்சிகள் கூட்டமானது ஜனவரி 31ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதையும் படிக்க | பிப்.1-இல் மத்திய பட்ஜெட்
கரோனா பரவலை கருத்தில் கொண்டு தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிக்கும் பொருட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வெவ்வேறு நேரங்களில் கூடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளம்: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வரிசையில் நின்று வாக்களித்த மோகன் லால், சுரேஷ் கோபி!

கேரள இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


