திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா தற்கொலை

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா தற்கொலை செய்துகொண்டார்.

News image

எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா தற்கொலை (கோப்புப்படம்)

Updated On :1 பிப்ரவரி 2024, 1:45 pm IST

பெங்களூரு: கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா தற்கொலை செய்துகொண்டார்.

முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் முதல் மகள் பத்மாவதியின் மகள் டாக்டர் சௌந்தர்யா(30). இவருக்கும் டாக்டர் நீரஜ் என்பவருக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 6 மாத குழந்தை உள்ளது. 

பெங்களூரு, வசந்த்நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது கணவர் டாக்டர் நீரஜுடன் டாக்டர் சௌந்தர்யா வசித்து வந்துள்ளார். வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு தனது கணவர் நீரஜ் வீட்டில் இருந்து வேலைக்குச் சென்றதும், சௌந்தர்யா தனது அறையில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது.

நீண்டநேரம் வெளியே வராததால் சந்தேகமடைந்த வீட்டுவேலைக்காரர்கள், கதவை திறக்க முயன்றபோது, உள்ளிருந்து தாளிட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த வேலைக்காரர்கள், அவரது கணவருக்கு தகவல் அளித்துள்ளனர். 

தகவல் அறிந்ததும் வீட்டுக்கு வந்த நீரஜ், மனைவி சௌந்தர்யா இருந்த கதவை உடைத்து அறைக்குள் சென்றுள்ளார். அங்கு மின் விசிறியில் தூக்கிட்டு தனது மனைவி சௌந்தர்யா தற்கொலை செய்துகொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, அருகில் உள்ள மல்லிகே மருத்துவமனைக்கு சௌந்தர்யா எடுத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரது உயிரை மீட்க தீவிரமுயற்சி எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரது உயிரை மீட்க முடியாததால், ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். 

தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து ஹைகிரவுண்ட்ஸ் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் முன்னாள் முதல்வர் எடியூரப்பா குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, பெங்களூருவில் உள்ள பௌரிங் அரசு மருத்துவமனைக்கு சௌந்தர்யா உடல் எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மருத்துவமனைக்கு சென்று தனது பேத்தி சௌந்தர்யாவின் உடலைக் கண்டு முன்னாள் முதல்வர் எடியூரப்பா கண்கலங்கினார். எடியூரப்பாவுக்கு முதல்வர் பசவராஜ்பொம்மை, அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆறுதல் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.