சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்த நூபுர் சர்மாவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்த கடும் கண்டனம் குறித்து செய்தியாளர்கள் ராகுல் காந்தியிடம் கேட்டபோது, உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது முற்றிலும் உண்மை. ஆனால், நாட்டில் தற்போது உருவாகியிருக்கும் சூழல், சர்ச்சைக்குரிய கருத்துக் கூறிய அந்த ஒரு நபரால் உருவானதல்ல, தேசிய ஜனநாயகக் கூட்டணியால் நடத்தப்படும் மத்திய அரசு உருவாக்கி வருகிறது என்றார்.
அது பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் மூலமாக மோசமான சூழல் உருவாக்கப்படுகிறது. இந்த மோசமான சூழல் என்பது கோபம் மற்றும் வெறுப்புச் சமூகமாக உள்ளது என்றும் கூறினார் ராகுல்.