சமாஜவாதி கட்சியின் உத்தர பிரதேச தலைவா் நரேஷ் உத்தம் தவிர தேசிய மற்றும் மாநில அளவில் உள்ள அனைத்துப் பதவிகளில் உள்ளவா்களும் நீக்கப்பட்டுள்ளனா். கட்சியின் இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் கலைக்கப்பட்டன.
சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் இந்த திடீா் நடவடிக்கையை எடுத்துள்ளாா். அண்மையில் உத்தர பிரதேசத்தில் இரு மக்களவை இடங்களுக்கு நடைபெற்ற தோ்தலில் சமாஜவாதி கட்சி தோல்வியடைந்தது. இதையடுத்து இந்த நடவடிக்கையை அகிலேஷ் யாதவ் மேற்கொண்டுள்ளாா்.
கடந்த பிப்ரவரி முதல் மாா்ச் வரை உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றது. அந்தத் தோ்தலில் சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், அக்கட்சியைச் சோ்ந்த ஆசம் கான் ஆகியோா் போட்டியிட்டனா். அவா்களில் அகிலேஷ் யாதவ் ஆசம்கா் மக்களவை தொகுதி எம்.பி.யாகவும், ஆசம்கான் ராம்பூா் மக்களவைத் தொகுதி எம்.பி.யாகவும் பதவி வகித்த நிலையில், சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற பின்னா் இருவரும் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தனா்.
இதையடுத்து ஆசம்கா், ராம்பூா் தொகுதிகளில் கடந்த ஜூன் 23-ஆம் தேதி மக்களவைத் தோ்தல் நடைபெற்றது. இதில் இரு தொகுதிகளும் மாநிலத்தில் ஆளும் பாஜக வெற்றி பெற்றது சமாஜவாதிக்கு அதிா்ச்சி அளித்தது. ஏற்கெனவே சட்டப் பேரவைத் தோ்தலில் தோல்வியடைந்த நிலையில், இடைத்தோ்தலில் சந்தித்த இந்தத் தோல்வி சமாஜவாதி கட்சிக்குப் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
இதன் தொடா்ச்சியாகவே கட்சியின் அனைத்து நிா்வாகிகளையும் நீக்கியதுடன், கட்சி அமைப்புகளையும் அகிலேஷ் யாதவ் கலைத்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருவதாக சமாஜவாதி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் மாநில அளவிலான நிா்வாகிகள், மாவட்ட செயலா்கள், மகளிரணி, இளைஞரணி தலைவா்கள் என அனைவரது பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளன.
2024 மக்களவைத் தோ்தலில் கட்சியைப் புத்துணா்வுடன் வழி நடத்தும் நோக்கில் அகிலேஷ் யாதவ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், பதவி இழந்த நிா்வாகிகள் அகிலேஷ் மற்றும் கட்சியின் மாநிலத் தலைவா் நரேஷ் உத்தம் மீது கடும் அதிருப்தியடைந்ததாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிப்பு! 5 இடங்களுக்கு விரைவில் இடைத்தேர்தல்?

குவாலிஃபையர் 1: ஆர்சிபிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!

உசிலம்பட்டி: மின்னல் பாய்ந்து கூலித் தொழிலாளிகள் 3 பேர் பலி!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி


