பாஜகவைச் சோ்ந்த முன்னாள் செய்தித் தொடா்பாளா் நூபுா் சா்மா, தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் இஸ்லாமிய இறைத் தூதா் நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவருக்கு எதிராக பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய போராட்டத்தால் பல இடங்களில் வன்முறை வெடித்தது. நூபுருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்திட்ட ராஜஸ்தானைச் சோ்ந்த தையல்காரா் கொடூரமாக கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டாா். கொலையாளிகள் இதனை விடியோ எடுத்து வெளியிட்டதுடன், பிரதமா் மோடி உள்ளிட்டோருக்கும் கொலை மிரட்டல் விடுத்தனா்.