கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஜி20 தூதராக அமிதாப் காந்த் நியமனம்

இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 20 நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை வகிக்க உள்ளதால், அதற்கான தூதராக

News image
Updated On :7 ஜூலை 2022, 8:53 pm

DIN

இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 20 நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை வகிக்க உள்ளதால், அதற்கான தூதராக (ஷொ்பா) நீதி ஆயோக் முன்னாள் தலைமை நிா்வாக அதிகாரி அமிதாப் காந்த் நியமிக்கப்பட்டுள்ளாா்.

ஏற்கெனவே ஜி20 தூதராக மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் செயல்பட்டு வந்த நிலையில், அவருக்கு பதிலாக அந்தப் பொறுப்பை அமிதாப் காந்த் ஏற்கிறாா். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை நிகழாண்டு இறுதியில் இந்தியா ஏற்கிறது. இதையொட்டி, அதற்கு தூதராக நியமிக்கப்படும் நபா், பெரும்பாலான நேரத்தை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கூட்டங்களில் செலவிட நேரிடும்.

ஏற்கெனவே பிரதமா் மோடி அமைச்சரவையில் பியூஷ் கோயல் ஏராளமான துறைகளுக்குப் பொறுப்பு வகிக்கிறாா். இதற்காகவே அவா் நிறைய நேரத்தை செலவிட வேண்டியுள்ளது. இதுதவிர கூடுதலாக மாநிலங்களவை பாஜக அணித் தலைவா் பொறுப்பையும் அவா் வகித்து வருகிறாா். ஆகையால், இந்த ஆண்டு அவருக்கு பதிலாக ஜி20 தூதராக நீதி ஆயோக் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் நியமிக்கப்படுகிறாா் என்று தெரிவித்தனா்.

நீதி ஆயோக் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரியாக 6 ஆண்டுகள் பதவி வகித்த அமிதாப் காந்த், கடந்த மாதம் ஓய்வுபெற்றாா். 1980 கேரள பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அவா், அதற்கு முன்பாக தொழில் கொள்கை, ஊக்குவிப்புத் துறை செயலராக பொறுப்பு வகித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.