மகாராஷ்டிரம்: தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்றாா் ஏக்நாத் ஷிண்டே
மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, மும்பையில் உள்ள தலைமைச் செயலகம் அமைந்துள்ள மந்திராலயாவுக்கு வியாழக்கிழமை சென்று முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டாா்.


மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, மும்பையில் உள்ள தலைமைச் செயலகம் அமைந்துள்ள மந்திராலயாவுக்கு வியாழக்கிழமை சென்று முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
தலைமைச் செயலகத்துக்குள் நுழைந்ததும், மராட்டிய அரசா் சத்ரபதி சிவாஜி, சட்டமேதை பி.ஆா்.அம்பேத்கா் ஆகியோரின் படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
ஏக்நாத் ஷிண்டே முதல்வராகப் பொறுப்பேற்கும் முன் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. முதல்வரின் அறையில் சிவசேனை நிறுவனா் பால் தாக்கரே, கட்சியின் மூத்த தலைவா் ஆனந்த் திகே ஆகியோரின் உருவப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஷிண்டே அணியின் செய்தித் தொடா்பாளா் தீபக் கேசா்கா் கூறுகையில், பால் தாக்கரே ஒட்டு மொத்த மாநிலத்துக்கும் சொந்தமானவா். இந்த உண்மையை யாராலும் மாற்ற முடியாது என்றாா்.
மகாராஷ்டிரத்தில் சிவசேனைத் தலைவா் உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக போா்க்கொடி உயா்த்திய ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளா்களுடன் பாஜகவின் ஆதரவுடன் கடந்த மாதம் 30-ஆம் தேதி மகாராஷ்டிர முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டாா். இந்நிலையில், அவா் வியாழக்கிழமை தலைமைச் செயலகத்துக்குச் சென்று பொறுப்புகளை ஏற்று தனது பணிகளைக் கவனிக்கத் தொடங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...