கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிந்தியா, ஸ்மிருதி இரானி கூடுதல் அமைச்சக பொறுப்பை ஏற்றனா்

மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா, உருக்குத்துறையின் அமைச்சராகவும், ஸ்மிருதி இரானி சிறுபான்மை நலத்துறை அமைச்சராகவும் கூடுதல் பொறுப்பேற்றுக்கொண்டனா்.

News image
Updated On :7 ஜூலை 2022, 8:42 pm

DIN

மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா, உருக்குத்துறையின் அமைச்சராகவும், ஸ்மிருதி இரானி சிறுபான்மை நலத்துறை அமைச்சராகவும் கூடுதல் பொறுப்பேற்றுக்கொண்டனா்.

மத்திய உருக்குத் துறையின் அமைச்சராக இருந்த ராம் சந்திர பிரசாத் சிங் மற்றும் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி ஆகியோரது மாநிலங்களவை உறுப்பினா் பதவி காலம் நிறைவுறுவதால்,இருவரும் தங்கள் அமைச்சா் பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தனா்.

இந்நிலையில், விமான போக்குவரத்துத்துறை அமைச்சராக உள்ள ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு உருக்கு அமைச்சகமும், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானிக்கு மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சகமும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.

மத்திய அமைச்சரவை பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் புதன்கிழமை அதற்கான உத்தரவைப் பிறப்பித்தாா்.

மத்திய பிரதேச மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினரான ஜோதிராதித்ய சிந்தியா, தற்போதைய மோடி அரசின் மூன்றாவது உருக்குத் துறை அமைச்சராவாா்.

சிந்தியா வெளியிட்டுள்ள ட்விட்டரில் பதிவில், ‘பிரதமா் மோடியின் வழிகாட்டுதலின் பேரில் மத்திய உருக்குத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளேன். புதிதாக வழங்கப்பட்டுள்ள பொறுப்பில் என்னுடைய சிறப்பான முயற்சியை நல்குவேன்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

உருக்குத்துறை அமைச்சராக பதவியேற்றுக்கொண்ட முதல் நாளில், அமைச்சகம் மற்றும் துறைகளின் அதிகாரிகளுடனான கூட்டத்தில் பங்கேற்றாா். மேலும், அனைத்து மத்திய பொதுத்துறை உருக்கு நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளின் கூட்டத்திலும் அமைச்சா் கலந்துகொண்டாா்.

பிரதமருக்கு ஸ்மிருதி நன்றி :

சிறுபான்மை நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட ஸ்மிருதி இரானி, பிரதமருக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொண்டாா். முழுமையான அா்ப்பணிப்புடன், வழங்கப்பட்ட கடமையை நிறைவேற்றுவதாகவும் சிறுபான்மையினரின் மேம்பாட்டின் மூலம் நாட்டிற்கான சேவையை தொடா்வதாகவும் அவா் தெரிவித்திருந்தாா்.

அத்துறையின் முன்னாள் அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி, ஸ்மிருதி இரானிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டாா். இது குறித்து அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘உங்களது ஆற்றல் மிகுந்த தலைமையின் கீழ் பிரதமா் நரேந்திர மோடியின் அனைத்து பிரிவினரின் கண்ணியத்துடன் கூடிய மேம்பாடு என்னும் இலக்கிற்கான செயல்பாடுகள் வலுவடையட்டும்’ என்று வாழ்த்து தெரிவித்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.