தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அமர்நாத்தில் சிக்கியுள்ள கன்னடர்களை மீட்க நடவடிக்கை: கர்நாடக முதல்வர்

அமர்நாத்தில் சிக்கியுள்ள கன்னடர்களை மீட்க மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்பை தெரிவித்தார். 

News image

பசவராஜ் பொம்மை (கோப்புப் படம்)

Updated On :9 ஜூலை 2022, 11:51 am

அமர்நாத்தில் சிக்கியுள்ள கன்னடர்களை மீட்க மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்பை தெரிவித்தார். 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பொம்மை, 

அமர்நாத் யாத்திரையில் திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பில் பலர் சிக்கியுள்ளனர். இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். 

கர்நாடக மாநிலத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட பயணிகள் காஷ்மீர் அமர்நாத் யாத்திரையில் சிக்கியுள்ளனர். 

யாத்திரைக்கு வந்த கர்நாடக பயணிகள் பாதுகாப்பாக உள்ளதாகவும், கன்னடர்கள் தொடர்பான எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 

மேலும், ஜம்மு-காஷ்மீர் அரசு மற்றும் மத்திய அரசுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம். இதற்காக தொடங்கப்பட்ட உதவி எண்ணில் குறைந்தது 15-20 பயணிகள் வரை தங்களின் தற்போதைய இருப்பிடம் குறித்து தகவல் வழங்குவதற்காக எங்களைத் தொடர்புகொண்டுள்ளனர். 

கர்நாடகத்தில் சிக்கித் தவிக்கும் பயணிகளை மீட்கும் பணி உடனடியாக தொடங்கப்படும். மீட்புப் பணிகளில் மத்திய அரசு, பிஎஸ்எஃப் மற்றும் ஐடிபிபி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மாநிலத் தலைமைச் செயலாளர் மத்திய அரசுடன் நேரடி தொடர்பில் இருக்கிறார். துயரத்தில் உள்ளவர்கள் உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு உடனடியாக மீட்க முடியும் என்று பொம்மை கூறினார். 24 மணி நேரமும் செயல்படும் வகையில் உதவி எண்களை அரசு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.