
கடந்த 2 நாள்களாக நிறுத்தப்பட்ட அமர்நாத் புனித யாத்திரை இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது.
ஜூலை 8-ம் தேதி அமர்நாத் அருகே ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமான 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் மாயமாகியுள்ளனர். இதனால் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதையும் படிக்கலாம்: அரசியல் அநாதை ஆகிவிட்டார் ஓ.பன்னீர்செல்வம்: நத்தம் விஸ்வநாதன் ஆவேசம்
இந்திய-திபெத்திய எல்லைக் காவல்துறையின் (ஐடிபிபி) மக்கள் தொடர்பு அதிகாரி விவேக் குமார் பாண்டே கூறுகையில்,
திங்கள்கிழமை காலை பஞ்சதர்னி பகுதியிலிருந்து அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக பால்டால் வழியாக பக்தர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.