சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பூரம் விழாவின் கதாநாயகன் பாரமேகாவு ஸ்ரீ பத்மநாபன் யானை மரணம்

யானைகளால் கோலாகலமாக கொண்டாடப்படும் கேரளத்தின் பூரம் விழாவின் நாயகனாக திகழ்ந்த பாரமேகாவு ஸ்ரீ பத்மநாபன் யானை செவ்வாய்க்கிழமை மரணம் அடைந்தது.

News image
பூரம் விழாவின் கதாநாயகன் பாரமேகாவு ஸ்ரீ பத்மநாபன் யானை மரணம்
Updated On :12 ஜூலை 2022, 6:12 am

DIN

சென்னை: யானைகளால் கோலாகலமாக கொண்டாடப்படும் கேரளத்தின் பூரம் விழாவின் நாயகனாக திகழ்ந்த பாரமேகாவு ஸ்ரீ பத்மநாபன் யானை செவ்வாய்க்கிழமை மரணம் அடைந்தது.

திரிசூரில் பிரசித்தி பெற்ற பாரமேகாவு அம்மனுடைய விக்கிரஹம் தாங்கிய திடம்பை கடந்த 15 ஆண்டுகளாக  தலையின் மேற்பகுதியில் சுமந்து சேவையாற்றிய வந்தது பாரமேகாவு ஸ்ரீ பத்மநாபன் என்ற யானை. 

பிகாரில் இருந்து கேரளத்துக்கு  வந்த யானை கூட்டத்தில் ஒன்று ஸ்ரீ பத்மநாபன் யானையை  2005 -ல் பாரமேகாவு தேவஸ்தானம் வாங்கியது. கடந்த ஒரு வாரகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்தது. 

Story image

பொதுமக்களின் தரிசனத்திற்காக திரிசூர் பாடுக்காடு பகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.  கோடநாடு வனத்தில் புதன்கிழமை இறுதி சடங்கு நடைபெறுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.