குஜராத்தில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
குஜராத்தின் தகோத் மாவட்டத்தில் உள்ள மங்கள் மகுடி ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தபோது திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
ரத்லம் ரயில் நிலைய பிரிவின் கீழ் உள்ள மங்கள் மகுடி ரயில் நிலையத்திற்கும் லிம்கேடா ரயில் நிலையத்திற்கும் இடையே இன்று அதிகாலை 1 மணியளவில் நடந்துள்ள இந்த விபத்தினால் தில்லி - மும்பை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகவும் சரக்கு ரயில் என்பதால் உயிரிழப்பு ஏதும் இல்லை என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து பாதையை சரிசெய்யும் பணியில் ரயில்வே துறையினர் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜக கூட்டணியில் இணைய சரத் பவாருக்கு மத்திய அமைச்சா் அழைப்பு

நிா்வாக வசதிகளுக்காக சென்னை மாநகராட்சியைப் பிரிக்க வேண்டும்: கராத்தே தியாகராஜன்
உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி

ஃபாா்முலா ஒன் (எஃப்1) காா் பந்தயம்: ஹாமில்டன் வெற்றி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


