மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஹைதராபாத்தில் ஐஐஐடிஎம் மாணவி தற்கொலை: காரணம்?

குவாலியரில் உள்ள இந்தியத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மைக் கழகத்தில் பயிலும் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :22 ஜூலை 2022, 7:00 am

IANS

குவாலியரில் உள்ள இந்தியத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மைக் கழகத்தில் பயிலும் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சி.தீனா(23) குவாலியரில் உள்ள ஐஐஐடிஎம்.யில் படித்து வந்தார். இவர் சைதாபாத் பகுதியில் உள்ள நான்கு மாடிக் குடியிருப்பின் மொட்டை மாடியிலிருந்து  குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், 

பிஜி ரெட்டி சைதாபாத் அருகே உள்ள ஆதர்ஷ் ஹைட்ஸ் பகுதியில் தனது பெற்றோருடன் வசித்துவந்த தீனா ஐஐஐடிஎம் குவாலியரில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் படிப்பைத் தொடர்ந்து வந்தார். 

அவர் கேமிங் தொடர்பான 'SeLFlo'  என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்தார். சேனலுக்கு 29,600 சந்தாதாரர்கள் இருந்தனர்.

தற்கொலை செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, தீனா செப்டம்பர் 17, 2015-ன் பழைய விடியோவைப் பதிவேற்றி தற்கொலைக் குறிப்பை ட்வீட் செய்துள்ளார்.

அவர் தனது பதிவில்,  என் குழந்தைப் பருவத்திலிருந்து இதுவரை நான் நிறையக் கஷ்டங்களை அனுபவித்துள்ளேன். உலகத்தைப் பிரிந்து செல்லும் நேரம் வந்துவிட்டது. தொடர்ந்து மனஅழுத்தம், சோகம் மற்றும் கோபத்தின் பிடியில் இனியும் என்னால் சிக்கித் தவிக்க முடியாது. 

தனது வாழ்க்கை நிறைய அதிர்ச்சிகளால் நிரம்பியதாகவும், சிறுவயதிலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் எழுதினார். மேலும் தனக்கு முன்னால் பெற்றோர்கள் சண்டையிடுவதைப் பற்றியும், அவர்களிடமிருந்து சரியான வழிகாட்டுதலைப் பெறவில்லை என்றும் அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

தீனாவின் தந்தை சந்திரசேகரன் இந்திய ரயில்வேயில் மின்னணு பராமரிப்பு பிரிவில் பணியாளராக உள்ளார். தாய் சங்கரி விஞ்ஞானி. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத்தில் குடியேறிய தம்பதியருக்கு தீனா ஒரே மகள். 

புதனன்று இரவு வீடு திரும்பியபோது அவரது அறையில் தீனா தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டதாக மாணவியின் பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்தனர். மறுநாள் கீழ்த் தளத்தில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்ற காவலாளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.