உத்தரப் பிரதேசத்தில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டதில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 16 பேர் காயமடைந்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பாரபங்கியில் பர்வஞ்சல் நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை காலை இரண்டு பேருந்துகள் (இரண்டடுக்கு பேருந்து) மோதிக்கொண்டன.
நரேந்திரபூர் மத்ராஹா கிராமத்திற்கு அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு பேருந்துகளும் பிகாரில் இருந்து தில்லி சென்று கொண்டிருந்தன.
விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 16 பேர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள் லக்னெள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாவும் பாரபங்கி எஸ்.பி. அனுராக் வத்ஸ் தெரிவித்தார்.
மேலும், 'உயிரிழந்தவர்களில் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதர பயணிகளுக்கு போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

புதுச்சேரி கூட்டணி ஆட்சியில் அதிமுக- அன்பழகன் உறுதி

எம்எல்ஏ விடுதி பராமரிப்புப் பணி ஒப்பந்தப்புள்ளி: நடவடிக்கைகளைத் தொடர உயா்நீதிமன்றம் அனுமதி

விளங்குளம் அட்சயபுரீசுவரா் கோயிலில் நாளை சனிப்பெயா்ச்சி விழா

‘முத்தமிழறிஞா் கலைஞா் அரங்கம்’: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

