டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

உ.பி.யில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து: 8 பேர் பலி; 16 பேர் காயம்

உத்தரப் பிரதேசத்தில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டதில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 16 பேர் காயமடைந்தனர். 

News image
Updated On :25 ஜூலை 2022, 6:40 am

DIN

உத்தரப் பிரதேசத்தில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டதில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 16 பேர் காயமடைந்தனர்.  

உத்தரப் பிரதேச மாநிலம் பாரபங்கியில் பர்வஞ்சல் நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை காலை இரண்டு பேருந்துகள் (இரண்டடுக்கு பேருந்து) மோதிக்கொண்டன. 

நரேந்திரபூர் மத்ராஹா கிராமத்திற்கு அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு பேருந்துகளும் பிகாரில் இருந்து தில்லி சென்று கொண்டிருந்தன. 

விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 16 பேர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள் லக்னெள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாவும் பாரபங்கி எஸ்.பி. அனுராக் வத்ஸ் தெரிவித்தார். 

மேலும், 'உயிரிழந்தவர்களில் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதர பயணிகளுக்கு போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றார். 

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.