பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

குஜராத்: கள்ளச்சாராயம் குடித்த 28 பேர் பலி

குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 28 பேர் பலியாகினர்...

News image
Updated On :26 ஜூலை 2022, 1:45 pm IST

குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 28 பேர் பலியாகினர்.

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மற்றும் போட்டட் மாவட்டத்தில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை அப்பகுதிகளைச் சேர்ந்த பலரும் குடித்துள்ளனர். 

இதில் மதுவைக் குடித்த சில மணி நேரங்களில்  உடல் நலக் குறைவு மற்றும் மயக்கம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அவர்களில் சிகிச்சை பலனின்றி இதுவரை 28 பேர் உயிரிழந்ததாகவும்  பலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனவும்  மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த மரணங்கள் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு கள்ளச்சாராயத்தைத் தயாரித்தவர்களைத் தேடு பணியும் துவங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.