தெலங்கானாவில் தொடரும் கனமழை: அனைத்து மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை

தெலங்கானாவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அம்மாநில அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெலங்கானாவில் தொடரும் கனமழை: அனைத்து மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை
Published on
Updated on
1 min read

தெலங்கானாவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அம்மாநில அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் சோமேஷ் குமார் கூறுகையில், 

அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தப்பட்டது. 

தில்லி சென்றுள்ள முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், மாநிலத்தில் பெய்துவரும் கனமழையைக் கவனித்து வருவதாகக் கூறினார். 

ஹைதராபாத்தின் புறநகரில் உள்ள ஹிமாயத் சாகர் மற்றும் ஒஸ்மான் சாகர் ஆகிய இரு நீர்த்தேக்கங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. 

திங்கள்கிழமை இரவு பெய்த கனமழையால், மூசி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மூசரம்பாக் பாலம் ஏற்கெனவே வெள்ளத்தில் மூழ்கி வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் உள்ள பாலங்களில் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் விழிப்பாக இருக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் அவர் கேட்டுக் கொண்டார். 

மேலும், உயிர்ச் சேதம் ஏற்படாமல் அனைத்து மாவட்ட அதிகாரிகளும் உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com