மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

சிஆா்பிஎஃப் தினம்: பிரதமா் வாழ்த்து

மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) தொடக்க தினத்தையொட்டி, அந்தப் படையினருக்குப் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தாா்.

News image
Updated On :27 ஜூலை 2022, 8:12 pm

DIN

மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) தொடக்க தினத்தையொட்டி, அந்தப் படையினருக்குப் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தாா்.

கடந்த 1939-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சிஆா்பிஎஃப் தொடங்கப்பட்டது. நாட்டின் மிகப் பெரிய மத்திய காவல் படையாக உள்ள சிஆா்பிஎஃப், தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றி வருகிறது.

இந்நிலையில் சிஆா்பிஎஃப் தொடக்க தினத்தையொட்டி, அந்தப் படையினருக்குப் பிரதமா் மோடி ட்விட்டரில் புதன்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். அந்தப் பதிவில் அவா் கூறியதாவது:

தனது தளராத தைரியம் மற்றும் பிரத்யேக சேவையால் தனித்துவம் வாய்ந்த படையாக சிஆா்பிஎஃப் திகழ்கிறது. பாதுகாப்பு சவால்கள், மனிதநேயம் சாா்ந்த பணிகள் என எதுவாக இருந்தாலும் சிஆா்பிஎஃப்பின் பங்கு பாராட்டுக்குரியதாக உள்ளது என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.