தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கேரளத்தில் 2 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் 1000-ஐ கடந்த கரோனா

கேரளத்தில் தினசரி கரோனா பாதிப்பு இன்று மீண்டும் 1000-ஐ கடந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

News image
Updated On :1 ஜூன் 2022, 9:31 am

DIN

கேரளத்தில் தினசரி கரோனா பாதிப்பு இன்று மீண்டும் 1000-ஐ கடந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், 

கேரளத்தில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு தினசரி பாதிப்பு 1,197 ஆக இன்று பதிவாகியுள்ளது. இதையடுத்து தொற்று விகிதம் 7.07 ஆக உள்ளது.

மே 23 முதல் 31 வரை கரோனா பாதிப்பு இருமடங்காக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எர்ணாகுளம், திருவனந்தபுரம் மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் கரோனா பாதிப்பு 100ஐ தாண்டியுள்ளது. 

மேலும், மருத்துவச் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 5,728 ஆக உயர்ந்துள்ளது. 

கேரளத்தில் இந்த வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதால், கரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.