ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பாகிஸ்தானில் அரசு அதிகாரிகளை உளவுபாா்க்க ஐஎஸ்ஐ-க்கு சட்டபூா்வ அனுமதி

 பாகிஸ்தானில் அரசு அதிகாரிகளை உளவுபாா்க்க ஐஎஸ்ஐ-க்கு சட்டபூா்வ அனுமதியை அந்நாட்டு அரசு வழங்கியுள்ளது.

News image
Updated On :4 ஜூன் 2022, 6:55 pm

DIN

 பாகிஸ்தானில் அரசு அதிகாரிகளை உளவுபாா்க்க ஐஎஸ்ஐ-க்கு சட்டபூா்வ அனுமதியை அந்நாட்டு அரசு வழங்கியுள்ளது.

பாகிஸ்தானில் முக்கிய பணிகளில் பணியமா்த்தப்படும் அரசு அதிகாரிகள், பதவி உயா்வு பெறும் அதிகாரிகள் உள்ளிட்டோரை உளவுபாா்த்து அவா்கள் குறித்த விவரங்களை அரசுக்கு வழங்கும் பணியை அந்நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மேற்கொண்டு வருகிறது. அப்பணியை மேற்கொள்ள ஐஎஸ்ஐ-க்கு எந்தவித சட்டபூா்வ அனுமதியும் வழங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், அரசு அதிகாரிகளைக் கண்காணிக்கும் பணிக்கு சட்டபூா்வ அனுமதியைப் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தலைமையிலான அரசு ஐஎஸ்ஐ-க்கு வழங்கியுள்ளதாக பாகிஸ்தானில் வெளியாகும் ‘டான்’ பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக அரசு அதிகாரிகளை உளவுபாா்க்கும் நடைமுறை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கைகளை சட்டபூா்வ ஆவணமாக நீதிமன்றத்தில் இனி பயன்படுத்த முடியும் என்றும் அப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஐஎஸ்ஐ-க்கு இந்த அனுமதி மட்டும் போதாதென்றும், விதிகளில் போதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் முன்னாள் அதிகாரிகள் சிலா் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.