மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சர்ச்சைப் பேச்சு: பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட செய்தித் தொடர்பாளர்கள்

முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர்கள் இருவர் இன்று (ஜூன் 5) கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

News image

கோப்புப் படம்

Updated On :5 ஜூன் 2022, 12:50 pm

DIN

முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர்கள் இருவர் இன்று (ஜூன் 5) கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் தொலைக்காட்சி விவாத மேடையில் கலந்து கொண்ட பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நூபுர் சர்மா மற்றும் நவீன்குமார் ஜிண்டால் முகமது நபிகள் குறித்து கூறிய சர்ச்சைக் கருத்து இஸ்லாமியர்களால் வன்மையாக கண்டிக்கப்பட்டது. இவர்கள் இருவருக்கும் எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் இன்று (ஜூன் 5) அவர்கள் பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இது குறித்து பாஜக  வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இந்திய வரலாற்றில் ஒவ்வொரு மதமும் சிறப்பாக வளர்ந்து வந்துள்ளது. பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கிறது. எந்த ஒரு மதமும் இழிவுபடுத்தப் படுவதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. அதேபோல எந்த மதத்தையும் ஒரு சித்தாந்தம் இழிவுப்படுத்துமானல் அதனையும் பாஜக வன்மையாக கண்டிக்கிறது. அவ்வாறு இழிவுப் படுத்துபவர்களை பாஜக ஊக்குவிக்காது. இந்திய அரசியலமைப்பு ஒவ்வொரு குடிமகனும் தனக்கு விருப்பமான மதத்தைப் பின்பற்ற வழிவகை செய்கிறது. இந்தியா 75வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள இந்த வேளையில் நாட்டை வலிமைப்படுத்தும் நோக்கில் பாஜக செயல்பட்டு வருகிறது. அந்த வலிமையான இந்தியாவில் அனைவரும் சமத்துவத்துடனும், ஒருமைப்பாட்டுடனும் செயல்படுவோம்” எனக் கூறியுள்ளது.

இந்த சர்ச்சைக் கருத்தை தெரிவித்துள்ள நூபுர் சர்மா மீது மஹாராஷ்டிர காவல் துறை இது போன்ற பல வழக்குகளை பதிவு செய்துள்ளது. இருப்பினும், நுபுர் சர்மா தான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை எனவும், தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.