அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஜம்மு-காஷ்மீரில் 2 நாள்களில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் செவ்வாய்க்கிழமை இரு வேறு இடங்களில் நடைபெற்ற மோதல்களில் 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

News image
Updated On :7 ஜூன் 2022, 7:43 pm

DIN

ஜம்மு-காஷ்மீரில் செவ்வாய்க்கிழமை இரு வேறு இடங்களில் நடைபெற்ற மோதல்களில் 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனா். இதன்மூலம் கடந்த இரண்டு நாள்களில் 2 பாகிஸ்தானியா்கள் உள்பட 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனா்.

இதில் 3 போ் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பையும், ஒருவா் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பையும் சோ்ந்தவா் என்பது தெரியவந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா சக்தாராஸ் கந்தி பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்புப் படையினா் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது மறைந்திருத்த பயங்கரவாதிகள் இருவா் திடீரென பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினா். இதையடுத்து, பாதுகாப்புப் படையினா் நடத்திய பதிலடி தாக்குதலில் இரு பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனா். கொல்லப்பட்டவா்கள் இருவரும் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா்கள் என்பதும், அவா்களில் ஒருவா் பாகிஸ்தானைச் சோ்ந்த தஃபூல் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

மற்றொரு சம்பவம்: தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நிகழ்ந்த மற்றொரு மோதலில் பயங்கரவாதி ஒருவரை பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா். அப்பகுதியில் தொடா்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

4 பயங்கரவாதிகள் கைது: சோபியானில் கடந்த வாரம் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்குக் காரணமான 4 பயங்கரவாதிகளைக் காவல் துறையினா் கைது செய்தனா். கடந்த 2-ஆம் தேதி நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பில் ராணுவத்தினா் வாடகைக்கு எடுத்திருந்த ஒரு வாகனத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டை வைத்து வெடிக்கச் செய்தனா். இதில் ராணுவ வீரா் ஒருவா் உயிரிழந்தாா். பொதுமக்கள் பலா் காயமடைந்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி குண்டு வெடிப்பு சம்பவத்துக்குக் காரணமான 4 பயங்கரவாதிகளைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.