தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா: புதிதாக 12,213 பேருக்கு தொற்று; 11 பேர் பலி

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,213 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று பாதித்த 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா: புதிதாக 12,213 பேருக்கு தொற்று; 11 பேர் பலி
Updated on
1 min read

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,213 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று பாதித்த 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 12,213 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,32,57,730-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 58,215 போ் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.

தொற்று பாதித்தவர்களில் புதிதாக 11 பேர் இறந்துள்ளனர். இதனால் தொற்றுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 5,24,803 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவில் இருந்து 7,624 போ் குணமடைந்துள்ளனா். இதனால் இதுவரை குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 4,26,74,712-ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 1,95,67,37,014 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. புதன்கிழமை மட்டும் 15,21,942 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத்து வருவது மக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com