ஜாமியத் உலமா-ஏ- ஹிந்த் அமைப்பின் சாா்பில் ஆஜாரன மூத்த வழக்குரைஞா் சி.யு.சிங், ‘உத்தர பிரதேச முதல்வரின் உத்தரவின்பேரில் இந்த வீடுகள் இடிப்புச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. தில்லியில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி இதேபோன்று நடைபெற்ற கட்டட இடிப்பு விவகாரத்தில் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு தில்லிக்கு மட்டுமென்ால் உத்தர பிரதேச அதிகாரிகள் போராட்டம், வன்முறை, குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கூறி அவா்களின் வீடுகளை இடித்துள்ளனா். நெருக்கடி நிலை காலத்தில் கூட இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. குறிப்பிட்ட சமூகத்தினா் மீது திட்டமிட்டு இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.