தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சிரபுஞ்சியில் ஒரே நாளில் 972 மி.மீ. மழை

மேகாலய மாநிலத்தில் அதிக சிறப்பு வாய்ந்த சிரபுஞ்சி பகுதியில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் மட்டும் 972 மி.மீ. மழை பதிவாகி புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது.

News image

சிரபுஞ்சியில் ஒரே நாளில் 972 மி.மீ. மழை

Updated On :17 ஜூன் 2022, 12:34 pm

DIN


புது தில்லி: மேகாலய மாநிலத்தில் அதிக சிறப்பு வாய்ந்த சிரபுஞ்சி பகுதியில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் மட்டும் 972 மி.மீ. மழை பதிவாகி புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்புதான், சிரபுஞ்சியில் 811 மி.மீ. மழை பதிவாகி புதிய சாதனை படைக்கப்பட்டநிலையில், அடுத்த இரண்டு நாள்களில் மழை தனது சாதனையை  தானே முறியடித்துள்ளது.

கடந்த 1995ஆம் ஆண்டுக்குப் பிறகு, வியாழக்கிழமை பெய்திருக்கும் 972 மி.மீ. மழையே அதிகப்படியானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உலகிலேயே அதிக மழைப்பொழிவு காணப்படும் சிரபுஞ்சியில், இதுவரை 9 முறை இந்த ஜூன் மாதத்தில் மட்டும் 800 மி.மீ. தாண்டி மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இந்த ஜூன் மாதத்தில் மட்டும், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி சிரபுஞ்சியில் இதுவரை 4081 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.