தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சுவிஸ் வங்கியில் 50% அதிகரித்த இந்தியர்களின் கருப்புப் பணம்

சுவிஸ் வங்கியில் இந்திய பெருமுதலாளிகள் முதலீடு செய்த கருப்புப்பணம் 14 ஆண்டுகள் இல்லாத அளவு அதிகரித்துள்ளதாக சுவிட்சர்லாந்து மத்திய வங்கி அறிவித்துள்ளது.

News image
Updated On :17 ஜூன் 2022, 2:01 pm

DIN

சுவிஸ் வங்கியில் இந்திய பெருமுதலாளிகள் முதலீடு செய்த கருப்புப்பணம் 14 ஆண்டுகள் இல்லாத அளவு அதிகரித்துள்ளதாக சுவிட்சர்லாந்து மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள பெருமுதலாளிகள் தங்களது சட்டவிரோத கருப்புப் பணத்தை சுவிஸ் வங்கியில் முதலீடு செய்து வருவது நாட்டின் முக்கியப் பிரச்னையாக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் காலங்களில் சுவிஸ் வங்கியில் உள்ள கருப்புப் பணத்தை மீட்பது முக்கிய வாக்குறுதியாக அளிக்கப்படும் அளவிற்கு இந்தப் பிரச்னை நாளுக்குநாள் வளர்ந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 14 ஆண்டுகள் இல்லாத அளவு இந்தியர்கள் தங்களது கருப்புப்பணத்தை சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ளதாக சுவிட்சர்லாந்து மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை அவ்வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 2021ஆம் ஆண்டு சுவிஸ் வங்கியில் தனிநபர், கிளை நிறுவனங்கள் மற்றூம் நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவை மூலம் இந்திய மதிப்பில் ரூ.30 ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு ரூ.20,700 கோடியாக இருந்த இந்தியர்களின் சுவிஸ் வங்கி கருப்புப்பணம் நடப்பாண்டு 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

சுவிஸ் வங்கியில் அதிகளவு முதலீடு செய்துள்ள நாடுகளின் பட்டியலில் பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள், ஜெர்மனி, பிரான்ஸ், சிங்கப்பூர், ஹாங்காங், லக்சம்பர்க், பஹாமாஸ், நெதர்லாந்து, கேமன் தீவுகள் மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகள் உள்ளன.

இந்த வரிசையில் பாகிஸ்தான், வங்கதேசம், உள்ளிட்ட நாடுகளைப் பின்தள்ளி இந்தியா 44ஆவது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.