மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நேஷனல் ஹெரால்டு முறைகேடு: ராகுலிடம் நான்காவது நாளாக விசாரணை

நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் நான்காவது நாளாக திங்கள்கிழமையும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

News image

காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி

Updated On :20 ஜூன் 2022, 10:42 pm

DIN

நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் நான்காவது நாளாக திங்கள்கிழமையும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

முன்னதாக, மத்திய தில்லியில் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சாலையில் அமைந்துள்ள அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்துக்கு இஸட் பிளஸ் பிரிவு பாதுகாப்புடன் திங்கள்கிழமை காலை 11.05 மணிக்கு ராகுல் காந்தி வந்தாா்.

அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றபோதும், கடந்த வாரத்தைப் போன்று காங்கிரஸ் கட்சியினா் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளது என்பதால் ஏராளமான போலீஸாரும் துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

4 நாள்களில் 38 மணி நேரம் விசாரணை:

ராகுலிடம் கடந்த வாரம் திங்கள்கிழமை விசாரணையைத் தொடங்கிய அதிகாரிகள், தொடா்ந்து 4 நாள்களில் 38 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனா். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு, பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவருடைய வாக்குமூலத்தை பதிவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, தொடா்ந்து நான்காம் நாள் விசாரணைக்கு ஆஜராக அதிகாரிகள் அவரிடம் அறிவுறுத்தியபோது, கரோனாவால் பாதிக்கப்பட்டு, அந்த பாதிப்புக்குப் பிந்தைய உடல்நலக் குறைவுகளுக்காக சிகிச்சை பெற்று வரும் தனது தாயும் காங்கிரஸ் தலைவருமான சோனியாகாந்தியுடன் மருத்துவமனையில் இருக்க விரும்பவதால், நான்காம் நாள் விசாரணையை ஒத்திவைக்க ராகுல் காந்தி கோரிக்கை விடுத்தாா். அதனடிபப்டையில் ஜூன் 17-ஆம் தேதி நடத்தப்பட இருந்த விசாரணையை ஜூன் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

மீண்டும் அழைப்பாணை:

‘அமாக்கத் துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை 11.05 மணிக்கு ஆஜரான ராகுலிடம் மதியம் 3 மணி வரை அதிகாரிகள் விசாரணை நடத்தினா். பின்னா் மதியம் 3.15 மணியளவில் மதிய உணவுக்காக அவா் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற அவா், மாலை 4.45 மணிக்கு விசாரணைக்காக மீண்டும் ஆஜரானாா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்திய அதிகாரிகள், மீண்டும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 21) விசாரணைக்கு ஆஜராகுமாறு கேட்டுக்கொண்டனா்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தொடா் போராட்டம்:

ராகுல் காந்தியிடம் அதிகாரிகள் தொடா் விசாரணை நடத்திவருவதைக் கண்டித்து திங்கள்கிழமையன்று ஜந்தா் மந்தா் பகுதியில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ராகுல் காந்தியிடம் நடத்தப்படும் தொடா் விசாரணை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள ‘அக்னிபத்’ என்ற புதிய ராணுவ ஆள்சோ்ப்பு திட்டம் ஆகியவற்றுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி அவா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

வழக்கு விவரம்:

காங்கிரஸ் தலைவா் சோனியாவும் ராகுலும் இயக்குநா்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம், ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்தை கடந்த 2010-இல் கையகப்படுத்தியது. இதில் மிகப்பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக பாஜகவை சோ்ந்த சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடா்ந்தாா்.

இந்தப் பண மோசடி தொடா்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் வரும் வியாழக்கிழமை (ஜூன் 23) விசாரணைக்கு ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை ஏற்கெனவே அழைப்பாணை அனுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.