அக்னிபத் திட்டம்: விமானப் படை, கப்பற் படையில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

அக்னிபத் திட்டத்தின் கீழ், இந்திய கப்பற் படை, விமானப் படையில் சேர்வதற்கு இன்று(ஜூன் 24) முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

புது தில்லி: அக்னிபத் திட்டத்தின் கீழ், இந்திய கப்பற் படை, விமானப் படையில் சேர்வதற்கு இன்று(ஜூன் 24) முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, முப்படைகளுக்கு தற்காலிகமாக 4 ஆண்டுகள் மட்டுமே பணியாற்றும் வகையில் இளைஞர்களை பணியமர்த்தும் அக்னிபத் திட்டத்தின் கீழ் கப்பற் படை, விமானப் படையில் சேர விரும்புவோர், இன்று(ஜூன் 24) முதல் ஜூலை 5 வரை விமானப் படை இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்திய விமானப் படையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://careerindianairforce.cdac.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களைளுக்கு இணைய தேர்வு வரும் ஜூலை 24 ஆம் தேதி நடத்தப்படும் என்றும் இந்திய விமானப் படை அறிவித்துள்ளது.

விமானப் படையில் சேர்வதற்கு, https://indianairforce.nic.in/ அல்லது https://www.careerindianairforce.cdac.in/ என்ற இணையதளங்களில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும். இந்த இணையதள  விண்ணப்பங்கள் இன்று(ஜூன் 24) காலை 10 மணி முதல், ஜூலை 5ஆம் தேதி மாலை 5 மணி வரை பயன்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com