தில்லி சென்றுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தை, தில்லியில் உள்ள இல்லத்தில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு இன்று மாலை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.
பல்வேறு அரசியல் பிரச்னைகள் காரணமாக, புது தில்லி சென்றிருக்கும் ஓ. பன்னீர்செல்வம், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கும் வேட்பாளர் திரௌபதி முர்மு, ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.
இதையும் பார்க்க.. வேட்புமனுத் தாக்கல் செய்தார் திரௌபதி முர்மு - புகைப்படங்கள்
இந்த சந்திப்பின்போது, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத்தும் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுமக்களின் எதிா்பாா்ப்புக்கு ஏற்றாா்போல போலீஸாா் செயல்பட வேண்டும்: சென்னை காவல் ஆணையா் அமல்ராஜ்

வாய்ப்புகள் தேடிவரும் கடக ராசிக்கு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 07)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 7 2026) 12 ராசிகளுக்கும்! பொருளாதார நிலை மேம்படும்!






