கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு 800-ஐ தாண்டியதை அடுத்து, சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில்,
மாநிலத்தில் நேற்று ஒருநாள் கரோனா பாதிப்பு 858 ஆகப் பதிவாகியுள்ளது. அதேநேரத்தில் 683 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். மீட்பு விகிதம் 2.36 ஆகவும், வாராந்திர நேர்மறை விகிதம் 3.63 சதவீதமாகவும் உள்ளது.
இதையும் வாசிக்கலாம்: இரண்டுபட்டிருக்கும் அதிமுக: மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சசிகலா
நிலைமையைத் தீவிரமாகக் கவனித்து வருகிறோம். பெங்களூரில் முகக்கவசம் அணிவதைக் கண்காணிக்க ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கரோனா நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால், தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் மக்கள் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தியுள்ளது.
நோய் பாதித்து சிகிச்சையில் உள்ளவர்கள் 5,067 ஆக உயர்ந்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 36,289 கரோனா பரிசோதனைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








