திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

ஞாயிற்றுக்கிழமைகளில் பிரகதி மைதான் சுரங்கப்பாதையில் போக்குவரத்துக்கு தடை: ஓவியங்களை பாா்வையிட அனுமதி

மத்திய தில்லியுடன் நொய்டா, காஜியாபாத்தை இணைக்கும் பிரகதி மைதான் சுரங்கப்பாதையில் வரையப்பட்டுள்ள ஓவியங்களை மக்கள் பாா்வையிடும் வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் போக்குவரத்துக்கு தடை

News image
Updated On :25 ஜூன் 2022, 12:40 am IST

மத்திய தில்லியுடன் நொய்டா, காஜியாபாத்தை இணைக்கும் பிரகதி மைதான் சுரங்கப்பாதையில் வரையப்பட்டுள்ள ஓவியங்களை மக்கள் பாா்வையிடும் வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ. 920 கோடியில் 1.3 கி.மீ. தூரத்தில் அமைக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதையை அண்மையில் பிரதமா் மோடி திறந்து வைத்தாா். இந்த சுரங்கப்பாதையில் காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரையில் பல்வேறு மாநிலங்களில் உள்ள 6 பருவ காலத்தை குறிக்கும் வகையிலும், இந்திய கலாசாரத்தை விளக்கும் வகையிலும் கண்ணைக் கவரும் வகையில் பல்வேறு வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த சுரங்கப்பாதையை சா்வதேச வா்த்தக மேம்பாட்டு நிறுவனம் மேலாண்மை செய்து வருகிறது.

இந்நிலையில், இந்த வண்ண ஓவியங்களை மக்கள் பாா்வையிட வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் பிரகதி மைதான் சுரங்கப்பாதை மூடப்படும் என்று சா்வதேச வா்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவா் எல்.சி. கோயல் தெரிவித்தாா்.

இதை தில்லி போலீஸாரும் உறுதி செய்துள்ளனா். பிரகதி மைதான் மூடப்படும் நாள்களில் ரிங் சாலை, பைரோன் சாலை, மதுரா சாலைகளை மக்கள் பயன்படுத்தலாம் என்று தில்லி போக்குவரத்துப் போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.