மத்திய தில்லியுடன் நொய்டா, காஜியாபாத்தை இணைக்கும் பிரகதி மைதான் சுரங்கப்பாதையில் வரையப்பட்டுள்ள ஓவியங்களை மக்கள் பாா்வையிடும் வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ. 920 கோடியில் 1.3 கி.மீ. தூரத்தில் அமைக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதையை அண்மையில் பிரதமா் மோடி திறந்து வைத்தாா். இந்த சுரங்கப்பாதையில் காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரையில் பல்வேறு மாநிலங்களில் உள்ள 6 பருவ காலத்தை குறிக்கும் வகையிலும், இந்திய கலாசாரத்தை விளக்கும் வகையிலும் கண்ணைக் கவரும் வகையில் பல்வேறு வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த சுரங்கப்பாதையை சா்வதேச வா்த்தக மேம்பாட்டு நிறுவனம் மேலாண்மை செய்து வருகிறது.
இந்நிலையில், இந்த வண்ண ஓவியங்களை மக்கள் பாா்வையிட வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் பிரகதி மைதான் சுரங்கப்பாதை மூடப்படும் என்று சா்வதேச வா்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவா் எல்.சி. கோயல் தெரிவித்தாா்.
இதை தில்லி போலீஸாரும் உறுதி செய்துள்ளனா். பிரகதி மைதான் மூடப்படும் நாள்களில் ரிங் சாலை, பைரோன் சாலை, மதுரா சாலைகளை மக்கள் பயன்படுத்தலாம் என்று தில்லி போக்குவரத்துப் போலீஸாா் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு: 3 இளைஞர்கள் காயம்
அண்ணா பிறந்த நாளில் அண்ணாமலை கட்சி தொடங்குகிறாரா?

ஜவுளி உற்பத்தி, வடிவமைப்புப் பயிற்சிக்கு இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்!

நீட் வினாத்தாள் கசிவு: நீதிமன்றக் காவலில் உள்ள மூவரிடம் சிபிஐ விசாரிக்க அனுமதி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



