மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கர்நாடகத்தில் 1000-ஐ நெருங்கும் கரோனா: புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும 938 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், அம்மாநில அரசு புதன்கிழமை புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :29 ஜூன் 2022, 9:24 am

DIN

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும 938 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், அம்மாநில அரசு புதன்கிழமை புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 

மாநில சுகாதாரத் துறை தரவுகளின்படி, 

நேர்மறை விகிதம் 5.44 சதவீதமாக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 4,918 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒருநாளில் 17.784 பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளது. 

பெங்களூருவில் 887 கரோனா வழக்குகளும், அதைத் தொடர்ந்து தட்சிண கன்னடா (21),  உடுப்பி (17), மைசூர் (14) மற்றும் தார்வாட் (10) என தொற்று பதிவாகியுள்ளன.

புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள்

அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்கள் 15-க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பதிவாகியிருந்தால், அங்குள்ள அனைவரும் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். 

மேலும், கரோனா தொற்று கண்டறியப்பட்டால் பள்ளி அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பை சீல் வைக்கவேண்டிய அவசியமில்லை. அடுக்குமாடிக் குடியிருப்புகளின் கிளப் ஹவுஸ், நீச்சல் குளம், விளையாட்டு ஆகியவற்றை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து, பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க மாநில அரசு ஆலோசித்து வருகிறது. 

கரோனா தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனைக் குழு மாநிலத்தில் ஏற்படக்கூடிய தொற்றுநோய் சூழ்நிலையைக் கட்டப்படுத்த இந்தப் பரிந்துரையை செய்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.