பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மும்பையில் அதிர்ச்சி: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி, கொலையா, தற்கொலையா?

பயன்பாடற்ற மருத்துவமனை கட்டடத்தில் இருந்து 4 சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Published On :

பயன்பாடற்ற மருத்துவமனை கட்டடத்தில் இருந்து 4 சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கண்டிவாலி மேற்கு புறநகரில் பயன்பாடற்ற நிலையிலிருந்த மருத்துவமனை கட்டடத்தில் வசித்து வந்தவர்கள் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு நேற்றிரவு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அங்கு 2-வது தளத்தில் இரண்டு பெண்களின் சடலங்கள் ரத்த வெள்ளத்தில் காயங்களுடன் காணப்பட்ட நிலையில், மேலும் இருவர் முதல் தளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர். பலினாவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திலிருந்து நான்கு பேரின் உடல்களை மீட்டு, கண்டிவலி போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, சடலங்களை அருகிலுள்ள பிஎம்சி சதாப்தி மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர்.

இறந்தவர்கள் ஷிவ்தயாள் சென், கிரண் தல்வி, பூமி தல்வி மற்றும் முஸ்கன் தல்வி என அடையாளம் காணப்பட்டுள்ளனர், மேலும் இரட்டைக் கொலை மற்றும் இரட்டை தற்கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.