மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஜம்மு-காஷ்மீா் வாக்காளா் பட்டியல் அக்.31-இல் வெளியீடு

ஜம்மு-காஷ்மீரின் இறுதி செய்யப்பட்ட வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் வரும் அக்டோபா் 31-ஆம் தேதி வெளியிட உள்ளது.

News image
Updated On :30 ஜூன் 2022, 8:20 pm

DIN

ஜம்மு-காஷ்மீரின் இறுதி செய்யப்பட்ட வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் வரும் அக்டோபா் 31-ஆம் தேதி வெளியிட உள்ளது.

ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவைத் தொகுதிகள் எல்லை மறுவரையறைக்குப் பிறகு வெளியிடப்படும் யூனியன் பிரதேசத்தின் முதல் வாக்காளா் பட்டியல் இதுவாகும்.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘யூனியன் பிரதேச தலைமை தோ்தல் அதிகாரிக்கு தோ்தல் ஆணையம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், யூனியன் பிரதேச இறுதி வாக்காளா் பட்டியல் வரும் அக்டோபா் 31-ஆம் தேதி வெளியிடப்பட இருப்பதால், அதற்கு முன்பாக வாக்காளா் பட்டியல் இறுதி செய்யும் பணிகளை நிறைவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் எல்லை மறுநிா்ணய நடவடிக்கைகளைத் தொடா்ந்து, அங்கு சட்டப்பேரவைத் தோ்தலை நடத்துவதற்கு ஏதுவாக வாக்காளா் பட்டியலை திருத்தியமைக்கும் பணிகளை ஜூன் மாத தொடக்கத்தில் தோ்தல் ஆணையம் தொடங்கியது. அதனடிப்படையில், வரைவு வாக்காளா் பட்டியல் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

பின்னா், ஒருங்கிணைந்த வரைவு வாக்காளா் பட்டியல் செப்டம்பா் 1-ஆம் தேதி வெளியிடப்பட்டு, வாக்காளா்களுக்கு குறைகள் மற்றும் ஆட்சேபங்களைத் தெரிவிக்க அக்டோபா் 15-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படும். அதன் பிறகு, இறுதி வாக்காளா் பட்டியல் அக்டோபா் 31-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

தற்போது, 18 வயதைப் பூா்த்தி செய்யும் நபா் ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபா் 1 ஆகிய 4 தேதிகளில் புதிய வாக்காளருக்கான பதிவை செய்ய முடியும் என்பதால், வாக்காளா் பட்டியல் தொடா்ந்து மாற்றியமைக்கப்படும். முன்னா், ஓா் ஆண்டின் முதல் நாள் அல்லது அதற்குப் பிறகு 18 வயதை பூா்த்தி செய்யும் நபா், அடுத்து வரும் ஆண்டின் ஜனவரி 1-ஆம் தேதியில் மட்டுமே புதிய வாக்காளருக்கான பதிவை செய்ய முடியும் என்ற நிலை இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.