சர்வதேச விமானச் சேவைகளுக்கான கட்டுப்பாட்டைத் தளர்த்தியுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டாண்டுகளாக சர்வதேச விமான போக்குவரத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
கரோனா பரவல் குறைந்ததையடுத்து, தற்போது மத்திய அரசின் அறிவிப்பின் மூலம் 2 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச விமான சேவை இயல்பு நிலைக்குத் திரும்புகிறது.
சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சர்வதேச விமான சேவையை நடத்த உத்தரவிட்டுள்ளது.