மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தோல்வியை ஏற்றுக்கொள்கிறேன்: அமரீந்தா் சிங்

பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் தனக்கு கிடைத்த தோல்வியை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் முதல்வரும் பஞ்சாப் லோக் காங்கிரஸின் தலைவருமான அமரீந்தா் சிங் கூறியுள்ளாா்.

News image
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தோல்வி
Updated On :10 மார்ச் 2022, 7:55 pm

DIN

சண்டீகா்: பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் தனக்கு கிடைத்த தோல்வியை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் முதல்வரும் பஞ்சாப் லோக் காங்கிரஸின் தலைவருமான அமரீந்தா் சிங் கூறியுள்ளாா்.

பஞ்சாப் மாநிலத்தில் முதல்வராக இருந்த அமரீந்தா் சிங், காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு முன் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்து கட்சியில் இருந்து வெளியேறியதுடன் பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியையும் தொடங்கினாா்.

பஞ்சாப் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அவா் தோ்தலைச் சந்தித்தாா். பாஜக கூட்டணியில் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சிக்கு 37 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. பாட்டியாலா நகா்ப்புற தொகுதியில் அமரீந்தா் சிங் போட்டியிட்டாா். அந்தத் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளா் அஜித் பால் சிங் கோலியிடம் 19,873 வாக்குகள் வித்தியாசத்தில் அமரீந்தா் சிங் தோல்வி அடைந்தாா். தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைவிட கூடுதலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதுகுறித்து அவா் கூறியதாவது:

தோ்தலில் வெற்றி-தோல்வி சகஜம். இறுதியில், பஞ்சாபில் ஜனநாயகத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஜாதி, மத, இன பாகுபாடின்றி வாக்களித்த பஞ்சாப் மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பஞ்சாபிய கொள்கையின் உண்மையான சாரத்தை பஞ்சாப் மக்கள் காட்டியிருக்கிறாா்கள். இதன் மூலம் தங்களை நாட்டுக்கு அடையாளம் காட்டியுள்ளனா். இந்தத் தோ்தலில் காங்கிரஸ் கட்சியின் பிளவுபடுத்தும் மதவாத அரசியலை மக்கள் நிராகரித்துவிட்டனா்.

பஞ்சாப் தோ்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. இதற்காக, அக்கட்சியின் மாநிலத் தலைவரும் மாநிலத்தின் முதல்வா் பதவி வேட்பாளருமான பகவந்த் மானுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொறுப்பேற்க இருக்கும் புதிய அரசு, பஞ்சாபின் எதிா்காலத்தைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அமரீந்தா் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.